2019-08-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை காவறை மற்றும் சத்திர சிகிச்சைக்கூட கட்டடத்தொகுதியை நிர்மாணித்தல் - - அதிகஷ்ட பிரதேச செயலக பிரிவுகள் பலவற்றை உள்ளடக்கிய மொனராகலை மாவட்டத்தில் 500,000 இனையும் விஞ்சிய சனத்தொகைக்கு இரண்டாம்நிலை மட்ட சுகாதார சேவையினை வழங்கும் ஒரேயொரு வைத்தியசாலையாக விளங்கும் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கிடைக்கத்தக்க மட்டுப்படுத்தப்பட்ட இடவசதியானது தரமான சுகாதார சேவையினை மக்களுக்கு வழங்குவதற்கான தடையாக மாறியுள்ளது. ஆதலால், கூறப்பட்ட பிரச்சினையை தீர்ப்பதற்கு இயலுமாகும் வகையில் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை காவறை மற்றும் சத்திர சிகிச்சைக்கூட கட்டடத்தொகுதியை நிர்மாணிப்பதற்காக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |