2019-08-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கலமெட்டிய கடற்றொழில் துறைமுகத்தை நிர்மாணிப்பதன் மூலம் பாதிக்கப்படும் கரைவலை கடற்றொழிலாளர்களுக்கு முழுமையான நட்டஈட்டை வழங்குதல் - - கலமெட்டிய கடற்றொழில் துறைமுகத்தை நிர்மாணிப்பதன் மூலம் பாதிக்கப்படும், கலமெட்டிய கரைவலை இறங்குதுறையின் கீழ் பதிவு செய்யப்பட்ட 28 கரைவலை உரிமையாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்து மில்லியன் ரூபா தொகையில் நட்டஈட்டினை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் நிதியங்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு கமத்தொழில், கால்நடை அபிவிருத்தி அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சரினாலும் நிதி அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |