2019-08-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பூக்கள் மற்றும் அழகு செடிகளின் விருத்தி செயற்பாட்டிற்கான உயிராற்றல் பன்முகத் தன்மையை இல்லாதொழித்தல், கரும்பு செய்கையின் வௌ்ளை இலைநோயை கட்டுப்படுத்தல் மற்றும் வெலிகம தென்னை ஓலை வாடும் நோயை இல்லாதொழித்தல் போன்றவற்றுக்காக Glyphosate பயன்படுத்துதல் - அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பூக்கள் மற்றும் அழகு செடிகளின் விருத்தி செயற்பாட்டிற்கான உயிராற்றல் பன்முகத் தன்மையை இல்லாதொழிப்பதற்கான பாவனை கருதி இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் சிபாரிசின் பேரில் 200 லீட்டர்கள் கொண்ட Glyphosate ஐ உரிய ஏற்றுமதியாளர்களுக்கு வழங்குவதற்கும், கரும்பு செய்கையின் வௌ்ளை இலைநோயை கட்டுப்படுத்துவதற்காக கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 31,815 லீட்டர்கள் கொண்ட Glyphosate ஐ வழங்குவதற்கும் மற்றும் வெலிகம தென்னை ஓலை வாடும் நோயை கட்டுப்படுத்துவதற்காக தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 200 லீட்டர்கள் கொண்ட Glyphosate ஐ வழங்குவதற்கும் அத்துடன் இது குறித்து நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் விதித்துரைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 32,215 லீட்டர்கள் கொண்ட Glyphosate ஐ இறக்குமதி செய்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கூடாக (CEPETCO) விநியோகிப்பதற்கும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரினாலும் அபிவிருத்தி திறமுறை மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |