• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாலபே, தகவல் தொழினுட்ப பூங்காவினுள் அமைந்துள்ள காணித் துண்டுகளை Institute of Chemistry Ceylon நிறுவனத்திற்கும் பேராதனை பல்கலைக்கழகத்திற்கும் குறித்தொதுக்குதல்
- - மாலபே, தகவல் தொழினுட்ப பூங்காவினுள் அமைந்துள்ள 01 ஏக்கர் - 0 றூட் - 6.40 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணம் கொண்ட காணியொன்றை 30 வருட குத்தகைக்கு IESL College of Engineering (Pvt) Ltd., நிறுவனத்திற்கு குறித்தொதுக்குவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. கூறப்பட்ட நிறுவனத்தினால் அரசாங்கத்திற்கு உரிய குத்தகை செலுத்தப்படாமை காரணமாக, மேற்போந்த தீர்மானத்தை இரத்துச்செய்து Institute of Chemistry Ceylon நிறுவனத்திற்கு கூறப்பட்ட காணித்துண்டை குறித்தொதுக்குவதற்கும் மேலும் 02 ஏக்கர் - 0 றூட் - 7.90 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணம் கொண்ட காணித் துண்டொன்றை பேராதனை பல்கலைக்கழகத்திற்கும் குறித்தொதுக்குவதற்கும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.