• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா நிறுவனங்களுக்கு சுற்றுலா அபிவிருத்தி வரி செலுத்தும் பொருட்டு நிறுத்திவைப்பு காலத்தை வழங்குதல்
- - 2019 ஏப்ரல் 21 ஆம் திகதியன்று நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் காரணமாக இலங்கையின் சுற்றுலாத் தொழில்துறையானது பாரதூரமாக பாதிக்கப்பட்டுள்ளமையினால், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா நிறுவனங்களினால் சுற்றுலா அபிவிருத்தி வரியை செலுத்துவதற்கான ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு நிறுத்திவைப்பு காலத்தை வழங்குதல் தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பு அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இவ்வரியை செலுத்துவதற்கு 2019 சனவரி 01 ஆம் திகதியிலிருந்து ஆறு (06) மாதங்கள் கொண்ட நிறுத்திவைப்பு காலமொன்றை வழங்குவதற்கும் அவ்வரியை 12 மாத தவணைகளில் மீண்டும் மீள அறவிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.