• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2016 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு நட்டஈடு வழங்குதல்
- - இதுவரை மதிப்பிடப்படாததும் ஆனால் கொலன்னாவை பிரதேச சபையினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதுமான, 2016 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த கொலன்னாவை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள8,879 வீடமைப்பு அலகுகள் சார்பில் அலகொன்றுக்கு 20,000/- ரூபா கொண்ட கருணை கொடுப்பனவொன்றை பொது நிருவாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஊடாக செலுத்தும் பொருட்டும் இந்த நோக்கத்திற்குத் தேவைப்படும் நிதி ஏற்பாடுகளை கூறப்பட்ட அமைச்சுக்கு வழங்கும் பொருட்டும் பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.