2019-07-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பொதுநலவாய நாடுகளின் சட்ட அமைச்சர்களின் ஒன்றுகூடலுக்கு அனுசரணை வழங்குதல் - 2019 (விடய இல.43) - பொதுநலவாய நாடுகளின் சட்ட அமைச்சர்களின் ஒன்றுகூடலை இலங்கையில் நடாத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, 'நீதிக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் சமமான அணுகல்' எனும் தொனிப்பொருளின் இந்தக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி நடாத்தும் பொருட்டு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |