2019-07-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு விமான சேவைகள் உடன்படிக்கை - 2018 ஆம் ஆண்டில் கென்யாவில் நைரோபியில் நடாத்தப்பட்ட சருவதேச சிவில் விமான சேவை இணக்கப்பேச்சு மாநாடொன்றில், இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் விமானசேவைக்கு அவசியமான உரிய நடவடிக்கைகள் தொடர்பில் உடன்பாட்டை எட்டியதுடன், விமானசேவை உடன்படிக்கையொன்று தொடர்பில் தொடக்கி வைக்கப்பட்டது. அதற்கிணங்க, நெதர்லாந்தின் KLM Royal Dutch Airline நிறுவனமும் ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனமும் இலங்கையிலிருந்தும் இலங்கைக்கும் தொழிற்படுவதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதற்கிணங்க, பூர்வாங்க கலந்துரையாடல்களில் உத்தியோகபூர்வ மட்டத்தில் இணங்கிக் கொள்ளப்பட்டிருந்த கூறப்பட்ட விமான சேவைகள் உடன்படிக்கையை கைச்சாத்திடும் பொருட்டும் கூறப்பட்ட உடன்படிக்கையின் பயனுறுதிவாய்ந்த அமுலாக்கம் கருதி, பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டும் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |