2019-07-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பிராந்திய வர்த்தக விமான சேவைகளை செயற்படுத்துவதற்காக உள்நாட்டு விமான நிலையங்களை திறத்தல் - கடந்த சில ஆண்டுகளின் போது உள்நாட்டு விமான சேவைகளை மேம்படுத்துவதற்கு தொடர்ச்சியான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது. அதன் விளைவாக மட்டக்களப்பு விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கும் இரத்மலானை விமான நிலையத்திலுள்ள சிவில் விமானசேவை வசதிகளை முன்னேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை பலாலி விமானநிலையத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கிணங்க, வௌிநாட்டு பயண இடங்களுக்கு ஏற்புடைய நியமங்களுடன் ஒத்திசைந்து பிராந்திய வர்த்தக விமானசேவை தொழிற்பாடுகளை ஆரம்பிப்பதற்காக விமான நிலையங்களின் சான்றுப்படுத்தலை மேற்கொள்ளுமாறும் அத்தகைய விமான நிலையங்களில் தமது சட்ட ரீதியான தொழிற்பாடுகளை ஆற்றும் பொருட்டு எல்லைக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளைத் தயாரிக்குமாறும் இலங்கை சிவில் விமானசேவைகள் அதிகாரசபைக்கு அறிவுறுத்தும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |