• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மார்ச் 21 ஆம் திகதியை நில அளவையாளர் தினமாக பிரகடனம் செய்தல்
- ஆகஸ்ட் 02 ஆம் திகதியை தேசிய நில அளவையாளர் தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன், சருவதேச நில அளவையாளர் சம்மேளனமானது மார்ச் 21 ஆம் திகதியை நில அளவையாளர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. அதற்கிணங்க, ஒவ்வொரு வருடமும் மார்ச் 21 ஆம் திகதியை நில அளவையாளர் தினமாக பிரகடனப்படுத்தும் பொருட்டு காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.