• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மிஹிந்தலையை தேசிய மரபுரிமையொன்றாக பிரகடனப்படுத்தல்
- பொசன் பண்டிகையை அதனுடன் இணைந்த விசேட சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களுடன் தேசிய பண்டிகையொன்றாக நடாத்தும் போது ஏற்படும் சிரமங்களை குறைக்கும் பொருட்டு வழங்கப்பட்டு வரும் தற்போதைய அரச அனுசரணையுடன் ஒப்பிடுகையில் கூடிய பங்களிப்பொன்றை அரசாங்கம் செய்யவேண்டியுள்ளமை அவசியமென அவதானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, மிஹிந்தலையை தேசிய மரபுரிமையொன்றாகவும், பொசன் வாரத்தையும் மிஹிந்தலை பெரஹராவையும் தேசிய வைபவங்களாகவும் பிரகடனப்படுத்து வதற்கும் அத்துடன் புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மிஹிந்தலை பொசன் பண்டிகை சார்பில் வருடாந்தம் ஏற்பாடுகளை குறித்தொதுக்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.