2019-07-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்தல் - 2019-2020 ஆம் ஆண்டுகளில் தேசிய மட்டத்திலான தேர்தலை நடாத்துவதற்கு தேவையான பணிகளை நிறைவேற்றும் செய்முறையில் தேர்தல் ஆணைக்குழு தற்போது ஈடுபட்டுள்ளது. அதற்கிணங்க, எதிர்காலத்தில் நடாத்தப்படவுள்ள தேர்தல்களை பயனுறுதி வாய்ந்த விதத்திலும் ஆக்கத்திறன்வாய்ந்த விதத்திலும் நிறைவேற்றிக் கொள்ள தேர்தல் ஆணைக்குழுவுக்கு இயலுமாகும் வகையில் அதுசார்பில் 14 புதிய கெப் வாகனங்களையும் வான் ஒன்றையும் கொள்வனவு செய்யும் பொருட்டு தேவையான நிதியினை ஏற்பாடு செய்து வழங்குவதற்காக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |