2019-07-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகள் சார்பில் இலவச விசா வழங்குதல் - சுற்றுலா பயணிகளின் அதிக எண்ணிக்கையில் இலங்கைக்கு வருகை தருவதை ஈர்க்கும் நோக்கில் அமைச்சரவையினால் தாய்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்க குடியரசு, யப்பான், அவுஸ்திரேலியா, தென்கொரிய, கனடா, சிங்கப்பூர், நியூசிலாந்து, மலேசியா, சுவிட்சர்லாந்து, காம்போஜியா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அடிப்படையில் 'வருகைதரும் சந்தர்ப்பத்தில் வழங்கப்படும் சுற்றுலா விசா அனுமதிப்பத்திரம்' ( ) வழங்கும் முன்னோடிக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், உயிர்த்த ஞாயிறுதினத்தன்று நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் காரணமாக எழுந்த பாதுகாப்பு நிலைமைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, சுற்றுலா பயணிகளுக்கான இலவச விசா வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துவற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.
தற்போது சூழ்நிலை பழைய நிலைக்கு வந்துள்ளமையினால் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் மேற்போந்த நாடுகளும் உள்ளடங்கலாக டென்மார்க், சுவீடன், நோர்வே, பின்லாந்து, அயர்லாந்து, பிலிப்பீன்ஸ், ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு இலவச அடிப்படையில் விசா வழங்கும் பொருட்டு இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகள் சார்பில் இலவச விசா 'வருகைதரும் சந்தர்ப்பத்தில் வழங்கப்படும் சுற்றுலா விசா அனுமதிப்பத்திரம்' வழங்கும் முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |