2019-07-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பனை நிதியத்தினைத் தாபித்தல் - வரவுசெலவுத்திட்டம் 2019 இன் மூலம் இலங்கை நல்லிணக்க செயல்முறையினை வலுப்படுத்தும் பொருட்டு 15.25 பில்லியன் ரூபாவைக் கொண்ட ஏற்பாடொன்று ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமுதாயங்கள் அபிவிருத்தியின் பயன்களை பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்குடன் 'பனை நிதியம்' என அழைக்கப்படும் சுயாதீன நிதியமொன்றை தாபிப்பதை அங்கீகரிக்கப்பட்ட பிரேரிப்புகள் உள்ளடக்குகின்றன. மதுபான பாவனை, போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் தாக்கம் மற்றும் இளையோர் தொழில்வாய்ப்பின்மையை இல்லாதொழித்தல் என்பவற்றுடன் தொடர்புபட்ட விடயங்கள் நோக்கியதாக சிவில் சமுகத்தினால் முன்னெடுக்கப்படும் மதியுரை மற்றும் ஆதரவு நிகழ்ச்சித்திட்டங்களுக்கு உதவுதலும் இந்த நிதியத்தின் குறிக்கோளாகும். கூறப்பட்ட நோக்கம் கருதி இரு வருட காலப்பகுதிக்குள் செலவழிக்கும் பொருட்டு 5 பில்லியன் ரூபா தொகையொன்று ஒதுக்கப்பட்டிருந்ததுடன் இந்த நிதியத்திற்கூடாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஏற்பாடுகளை ஒதுக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க, 'பனை நிதியம்' என அழைக்கப்படும் சுயாதீன நிறுவனமொன்றை தாபிப்பதற்கு அவசியமான சட்டத்தினை வரையுமாறு சட்டவரைநருக்கு அறிவுறுத்தும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |