• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொழிற்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
- 1942 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தொழிற்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் முக்கிய பணியாவது ஊழியர்களின் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் அதேபோன்று அவர்களுடைய நலனோம்பலை பேணுவதற்கு ஏதுவாக தொழில் திணைக்களத்தினால் தொழிற்சாலைகளை பரிசீலனை செய்வதாகும். இந்த சட்டத்தின் ஏற்பாடுகள் 65 வருடங்களுக்கு மேலாக நடைமுறைப் படுத்தப்பட்டாலும் இதற்குரியதாக இதுவரை ஆக்கப்பட்டுள்ளது சில ஒழுங்குவிதிகள் மாத்திரமாகும். இதற்கிணங்க, பயனுள்ள வகையில் சட்டத்தை அமுல்படுத்தும் தேவையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த சட்டத்திற்குரியதாக தொழிற்சாலைகளை பதிவு செய்தல், தொழிற்சாலை கட்டடங்களை அங்கீகரித்தல், நீராவி கொதிகலன்களை பதிவு செய்தல், நீராவி கொதிகலன் உட்பட ஏனைய அமுக்க பாத்திரங்களை பரிசோதித்தல் தொடர்பில் சான்றிதழ்களை வழங்குதல், அதிக சத்தத்திலிருந்து ஊழியர்களை பாதுகாத்தல் மற்றும் வேலைத்தளத்தில் போதுமான வௌிச்சம் இருத்தல் போன்ற விடயங்களுக்கு பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் இதற்கான அங்கீகாரம் கிடைத்தன் பின்னர் உரிய ஒழுங்குவிதிகளை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்குமாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரின் கோரிக்கையின் பேரில் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.