2019-07-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
1980 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க தேருநர்களை பதிவு செய்யும் சட்டத்தை திருத்துதல் - வருடாந்தம் மேற்கொள்ளப்படும் தேருநர் இடாப்புகளை மீளமைக்கும் செயற்பாட்டின் போது தேருநர் இடாப்பினை உறுதிப்படுத்தியதன் பின்னர் அடுத்த வருடத்திற்கான தேருநர் இடாப்புகளுக்கான மீளமைப்பு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் வரையிலான காலப்பகுதிக்குள் 18 வயதினை பூர்த்தி செய்யும் அத்துடன் ஏனைய தகைமைகளை பூர்த்தி செய்யும் இளைஞர்களுக்கும் அவர்களுடைய வாக்குகளை அளிப்பதற்கான வாய்ப்பினை வழங்கும் பொருட்டு 1980 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க தேருநர்களை பதிவு செய்யும் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை மும்மொழிகளிலும் அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் இந்த சட்டமூலத்தை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |