• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குறுத்தி மேற்பார்வை செய்யப்படும் தெரிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு / புலனாய்வு சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான கேள்வி
- - இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குறுத்தி மேற்பார்வை செய்யப்படும் தெரிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு / புலனாய்வு ஒன்றை நடாத்துவதற்கான உலகளாவிய செயல்முறை மற்றும் சருவதேச அனுபவத்தைக் கொண்ட நிறுவனத்தின் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக முன்வைக்கப்பட்டிருந்த கேள்விகளின் விலைகளுக்கிடையிலான வித்தியாசம் மிக அதிகமாக உள்ளதன் காரணமாக மீண்டும் கேள்வி கோருவது பொருத்தமானதென அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரைக் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த தடயவியல் கணக்காய்வுக்கான செலவு மதிப்பீட்டை திருத்தி உத்தேச நோக்கத்திற்கு பொருத்தமான நிறுவனமொன்றை தெரிவுசெய்யும் பொருட்டு கேள்விகளை மீளக் கோருவதற்கும் இதற்கு முன்னர் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரைக் கொள்வனவுக் குழுவின் சேவையை இதற்காக பெற்றுக் கொள்வதற்காகவும் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.