2019-07-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கந்தர கடற்றொழில் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக நிதி ஏற்பாடுளை ஒதுக்குதல் - - கந்தர மற்றும் குருநகர் கடற்றொழில் துறைமுகங்களை நிர்மாணிப்பதற்குரியதாக இதற்கு முன்னர் நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்திட்ட பிரேரிப்பு நிறுவனமான Bouygues Travaux Publics கம்பனியினால் சுயாதீன சாத்தியத்தகவாய்வு மதிப்பீடுகளையும் உள்நாட்டு பொறியியல் மதிப்பீடொன்றையும் சமர்ப்பிக்கப்படவேண்டுமென தீர்மானிக்கப்பட்ட போதிலும் கூறப்பட்ட கம்பனியினால் உரிய திகதிக்கு முன்னர் விரிவான கருத்திட்ட பிரேரிப்பொன்றை சமர்ப்பிக்க இயலாமற் போனமையினால் இந்த கம்பனி சம்பந்தமாக செயற்படுத்தப்பட்ட பெறுகை நடவடிக்கையை முடிவுறுத்துவதற்கும் கந்தர கடற்றொழில் துறைமுகத்தை உள்நாட்டு நிதியினை பயன்படுத்தி நிர்மாணிக்கும் பொருட்டும் நிதி அமைச்சரினாலும் கமத்தொழில், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |