2019-07-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தை திருத்துதல் - தேசிய மட்டத்தில் இலங்கையின் சுற்றாடலில் உள்வாங்கப்பட்டுள்ள சகல துறைகளையும் ஒருங்கிணைப்புச் செய்வதற்குத் தேவைப்படும் பரந்துபட்ட சட்டக்கட்டமைப்பொன்றை வழங்கும் நோக்குடன், தற்கால போக்குகளுடன் பொருந்தச் செய்யும் பொருட்டு சட்டமாக்கப்பட்ட 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இந்த திருத்தத்தை செய்யும் போது, பேரிடர் விளைவிக்கக்கூடிய கழிவு பொருட்களை உருவாக்கும் பொருட்கள் தொடர்பில் உற்பத்தியாளரின் முழுமையான பொறுப்பு, பல்வகை கட்டங்களைக் கொண்ட சுற்றாடல் உடன்படிக்கைகளை வலுவூட்டுவதற்கு உள்நாட்டு சட்டங்களை ஏற்படுத்தல், ஆரம்ப சுற்றாடல் பரிசோதனையிலுள்ள சுற்றாடல் நிலமைகள் மற்றும் சுற்றாடல் விளைவுகளின் மதிப்பீடு தொடர்பில் கவனம் செலுத்துதல், சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரங்களை தேவைப்படுத்தாத செயற்பாடுகள் மூலம் சுற்றாடல் மாசுபடுவதை தடுத்தல், நடைமுறையிலுள்ள சட்டத்தின் மூலம் தடுக்கப்பட்ட ஏதேனும் உபகரணத்தை கட்டுக்காவலில் எடுப்பதற்கும் அதனை அழிப்பதற்குமான அதிகாரத்தினை பெற்றுக் கொள்தல் மற்றும் சுற்றாடல் குழு உறுப்பினர்களை அதிகரித்தல் போன்ற மேலதிக திருத்தங்களை உள்ளடக்குவதற்கென 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தை திருத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|