2019-06-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் கணனிகளை வழங்குதல் - உயர்தர வகுப்புகளில் கற்கும் மாணவர்களுக்கும் அவர்களின் ஆசிரியர்களுக்கும், அவர்களின் கல்வி செயற்பாடுகளின் தர அம்சங்களை மேம்படுத்தும் பொருட்டு டெப் கணனிகளை வழங்குவதற்கு 2017 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் பிரேரிப்பொன்று செய்யப்பட்டுள்ளது. அதற்கிணங்க, 2019 ஆம் ஆண்டில் தரம் 12 இற்கான அனுமதியை பெற்றுள்ள மாணவர்களுக்கும் அதேபோன்று உரிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் கணனிகளை வழங்கும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |