• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
- குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமானது 2015 ஆம் ஆண்டில் சட்டமாக்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் எனும் விடயம் தொடர்பான சர்வதேச விதிமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுடன் இணக்கமுறுவதற்கு தேவைப்படுத்தப்பட்ட ஏற்பாடுகளை உள்ளடக்கி கூறப்பட்ட சட்டத்தை இற்றைப்படுத்தி பாராளுமன்றத்தில் புதிய வரைவு சட்டமூலமொன்றை சமர்ப்பிக்கும் பொருட்டும் 2015 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டத்தை இரத்துச் செய்யும் பொருட்டும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.