2019-06-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மொனராகலை மாவட்ட விளையாட்டு கட்டடத்தொகுதி மற்றும் உள்ளக விளையாட்டு அரங்கு என்பவற்றின் நிர்மாணம்“ - மொனராகலை மாவட்ட அபிவிருத்தியில் ஒரு புதிய மாதிரி பிரிவொன்றாக, மொனராகலை மாவட்டத்தில் வசிக்கும் சமுதாயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் எதிர்கால சந்ததியின் விளையாட்டு ஆற்றல்களை மேம்படுத்தும் நோக்குடன், இந்த மாவட்டத்திலுள்ள குமரவரத்த தோட்டத்தில் அமைந்துள்ள 10 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட, இந்த நோக்கத்திற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட காணித் துண்டில் விளையாட்டு கட்டடத்தொகுதி மற்றும் உள்ளக விளையாட்டு அரங்கினை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இந்த நோக்கத்திற்குத் தேவையான நிதியங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு பொது நிருவாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினாலும் தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு தொழில் வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |