2019-06-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
குளியாபிட்டிய மேற்கு பிரதேச செயலகத்திற்கு அரசாங்க சேவை உள்ளக விளையாட்டு அரங்கு கட்டடத் தொகுதியொன்றை நிர்மாணித்தல் - அரசாங்க ஊழியர்கள் அதிகமுள்ள குருநாகல் மாவட்டத்தில் அரசாங்க ஊழியர்கள் அவர்களுடைய விளையாட்டுத் தேவைகளுக்காக மீகஹகொட்டுவ பிரதேசத்தில் அமைந்துள்ள அரசாங்க சேவை விளையாட்டு சங்க மனையிடத்தில் அமைந்துள்ள வசதிகளை பயன்படுத்துவதோடு, அவை மிக குறைந்த வசதிகளுடன் கூடியவையாகும். இதற்கிணங்க இந்த விளையாட்டு சங்கத்தின் மனையிடத்தில் பேட்மின்டென் மைதானம், டென்னிஸ் மைதானம், மேசைக்கோல் பந்தாட்டம் (Snooker), ஸ்கொஸ் விளையாட்டுத்திடல், நீச்சல் தடாகம், சிற்றுண்டிச்சாலை, அலுவலக கட்டட தொகுதி, மாநாட்டு வசதி மற்றும் உடற்பயிற்சி மண்டபம் என்பவற்றையும் கொண்ட முழுமையான கட்டடத் தொகுதியொன்றாக அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நிதியினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |