• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்களை வைத்திருப்ப வர்களுக்கு வீசா பெற்றுக் கொள்வதிலிருந்து பரஸ்பரம் விலக்களிப்பதற்காக இலங்கைக்கும் எல்-சல்வதோர் குடியரசுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளல்
- இலங்கைக்கும் எல்-சல்வதோர் குடியரசுக்கும் இடையில் பிரசைகளுக்கு பரஸ்பர அடிப்படையில் பயணங்களுக்கான வசதிகளை செய்யும், உரிய செயல்முறைகளை எளிதாக்கும் மற்றும் இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவினை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு வீசா பெற்றுக் கொள்வதிலிருந்து விலக்களிப்பதற்கும் இவ்வாறு உள்வரும் பிரசைகளுக்கு வீசா அனுமதி பத்திரமின்றி 30 நாட்கள் தங்கியிருப்பதற்கும் அனுமதி வழங்குவதற்காக இலங்கைக்கும் எல்-சல்வதோர் குடியரசுக்கும் இடையில் செய்து கொள்ளப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடும் பொருட்டு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.