• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தேசிய கண் வைத்தியசாலையில் வௌிநோயாளர் பிரிவு, சத்திர சிகிச்சைக்கூடம், காவறைத் தொகுதி என்பவற்றை நிர்மாணித்தல்
- இலங்கையில் கண் சம்பந்தமான சகல பிரச்சினைகளுக்கும் தேவையான சேவைகளை வழங்கும் மூன்றாம் நிலை சிகிச்சை சேவை வைத்தியசாலையொன்றான இலங்கை தேசிய கண் வைத்தியசாலையை மேலும் சர்வதேச தரங்களுக்கு அமைவாக அபிவிருத்தி செய்யும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 'தேசிய சுகாதார திறமுறை பிரதான திட்டம் - 2016 - 2025 ' என்பதன் கீழ் நாட்டின் உயர்மட்ட வைத்திசாலையொன்றாக சேவை பெறநர்களுக்கு தரமிக்க கண் சிகிச்சை சேவைகளை வழங்குவதற்குத் போதுமான இடவசதியுடன் வௌிநோயாளர் பிரிவு, காவறைத் தொகுதி, தனிமுறை மருத்துவ சிகிச்சை வசதி, சத்திர சிகிச்சைக்கூடம், நோய் பரிசோதனை வசதிகள் உட்பட ஏனைய உதவிச் சேவைகளை வழங்குவதற்காக 14 மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை 4,565 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டின் கீழ் நிர்மாணிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.