• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் பேராசிரியர் பிரிவினை அமைத்தல்
- இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் புதிதாக தாபிக்கப்பட்ட மருத்துவ பீடத்தின் மருத்துவ மாணவர்களுக்கு சிகிச்சை பயிற்சிக்கான வசதிகளை வழங்கும் நோக்கில் இர்த்தினபுரி மாகாண வைத்தியசாலை 2018 ஆம் ஆண்டில் போதனா வைத்தியசாலையொன்றைகாக தரமுயர்த்தப்பட்டதோடு, இந்த மருத்துவ பீடத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை பயிற்சி வழங்குவதற்குத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்யும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 4,324.22 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டில் உத்தேச பேராசிரியர் பிரிவினை ஆறு மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றாக நிர்மாணிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.