• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சூறாவளி காரணமாக சேதமடைந்த கியுபா நாட்டிலுள்ள கிராமமொன்றை மீளக்கட்டியெழுப்புவதற்காக 50,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குதல்
- கியுபாவுக்கு கடும் சேதத்தை விளைவித்து இந்த ஆண்டின் சனவரி மாதத்தில் நிகழ்ந்த சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஹவானா ரெக்லா நகரத்திற்கு அண்மையில் அமைந்துள்ள கிராமமொன்றை மறுசீரமைப்பதற்கு இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நட்புறவை மேலும் உறுதி செய்வதனை அடையாளமாகவும் இந்த ஆண்டு இரு நாடுகளுக்குமான இராஜதந்திரமான உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 வருடங்கள் பூர்த்தியானதை நினைவுகூருதல் சார்பிலும் 50,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.