2019-06-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்க நிதி முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்திற்கு அமைவாக சமர்ப்பிக்கப்படும் ஆண்டறிக்கை - 2018 - 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க அரசாங்க நிதி முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்தின் 13 பிரிவிலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக ஆண்டறிக்கையொன்றினை (இறுதி வரவுசெலவுத்திட்ட நிலைமை பற்றிய அறிக்கை) நிதி அமைச்சரினால் பாராளுமன்றத்திற்கும் பொது மக்களுக்கும் உரிய நிதியாண்டு முடிவுற்றதன் பின்னர் ஐந்து மாத காலங்கள் கடப்பதற்கு முன்னர் வழங்கப்படுதல் வேண்டும். இதற்கிணங்க, நாட்டின் பேரின , அரசாங்க நிதி கொள்கை நோக்கம், மொத்த வரவுசெலவுத்திட்ட நிலமை, அரசாங்கத் துறையின் செயலாற்றுகை, மீளமைப்பு மற்றும் நிதிக்கூற்று ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள 2018 ஆம் ஆண்டின் அரசாங்க நிதி செயற்பாடு பற்றி இற்றைப்படுத்திய தகவல்களை உள்ளடக்கிய அறிக்கையினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |