• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொலன்நறுவை மாவட்டத்தில் மும்மொழி கல்வியுடன் கூடிய பல்லின மாணவர்களைக் கொண்ட தேசிய பாடசாலையில் உயர்தர வகுப்புகளுடனும் ஆய்வுகூட வசதிகளுடனுங்கூடிய கட்டடத் தொகுதியை நிர்மாணித்தல்
- பொலன்நறுவை மாவட்டத்தில் மும்மொழி கல்வியுடன் கூடிய பல்லின மாணவர்களைக் கொண்ட தேசிய பாடசாலையின் முதலாவது கட்டடத்தொகுதியானது இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபாவைக் கொண்ட நன்கொடையின் கீழ் நிருவாக செயற்பாடுகளுக்குத் தேவைப்படும் வசதிகளை வழங்கி, தரம் 6 இலிருந்து தரம் 9 வரையிலான வகுப்புகளுக்கான இடவசதியை வழங்கும் பொருட்டு நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன் கூறப்பட்ட பாடசாலையின் தரம் 12 மற்றும் தரம் 13 என்பவற்றின் வகுப்பறைகளுக்கும் ஆய்வுகூட வசதிகளுக்கும் வேறொரு கட்டடத்தொகுதியொன்றையும் நிர்மாணிப்பதற்கான தேவை எழுந்துள்ளது. அதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, கூறப்பட்ட கட்டடத்தின் நிர்மாண வேலைகளை 245.9 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s.Central Engineering Services (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.