• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெங்கு அபிவிருத்தி அதிகாரசபைக்கு தொழில்முயற்சி வளங்கள் திட்டமிடல் முறைமையொன்றைத் தாபித்தல்
- தெங்குத் துறையானது இலங்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 0.6% இற்கு பங்களிப்பு செய்வதுடன் மொத்த ஏற்றுமதி வருமானத்தின் 5.2% பங்களிப்பை உருவாக்கின்றது. முன்னைய ஆண்டின் முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதலாம் காலாண்டில் தெங்கு சார்ந்த உற்பத்தி பொருட்களிலிருந்து அதிகரித்த ஏற்றுமதி வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கு இயலுமாக இருந்துள்ளது. தெங்கு சார்ந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அத்துடன் முழுமையான தெங்கு சார்ந்த செய்முறை சார்பில் உரியவாறும் தரத்தைக் கொண்டதாகவும் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையானது அதன் சேவைகளை உற்பத்தியாளர்களுக்கும், பயிற்செய்கையாளர்களுக்கும் மற்றும் பல்வேறுபட்ட அரசாங்க நிறுவனங்களுக்கும் அத்துடன் பல்வேறுபட்ட அக்கறைதாரர்களுக்கும் வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளது. அதன் சேவைகளை கூடுதல் பயனுறுதி வாய்ந்ததாகவும், துல்லியமாகவும் எதுவித தாமதமும் இன்றியும் வழங்குவதற்கு தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையையும் தேவையான சேவைகளை இணையத்திற்கூடாக இலகுவாக பெற்றுக் கொள்வதற்கு வாடிக்கையாளர்களையும் இது இயலுமைப்படுத்தும். அதற்கிணங்க, 40 மில்லியன் ரூபா கொண்ட முதலீட்டுடன் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை சார்பில் தொழில்முயற்சி வளங்கள் திட்டமிடல் முறைமையொன்றைத் தாபிக்கும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.