2019-06-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின் முகாமைத்துவத்தை மேற்பார்வை செய்வதற்காக செயலணியொன்றைத் தாபித்தல் - பெருந்தோட்ட துறையை நிலைபேறுடையதாக பேணுவதற்குத் தேவையான வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமான சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு மூன்று வருட காலத்திற்கு செயலணியொன்றைத் தாபிப்பது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. பெருந்தோட்டங்களின் தரத்தினை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்ட இந்த வழிமுறையினை மூன்று (03 வருட காலத்திற்குள் நடைமுறைப்படுத்துவதற்கு இந்த துறையில் பத்து நிபுணர்களைக் கொண்ட செயலணியொன்றைத் தாபிப்பதற்கும் இதற்குத் தேவையான ஏனைய வசதிகளை ஏற்பாடு செய்யும் பொருட்டும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |