• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
செயற்திறனுடைய பொறுப்பு முகாமைத்துவம்
- அரசாங்க கடன்களை மீள செலுத்துவதற்குத் தேவையான நிதியினை மிகவும் மதிநுட்பமாக பெற்றுக் கொள்கின்றமையை உறுதிப்படுத்தும் பொருட்டு அரசாங்க கடன் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் 2018 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க செயற்திறனுடைய பொறுப்பு முகாமைத்துவ சட்டம் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டது. இதற்கமைவாக, 2020 ஆம் ஆண்டிலிருந்து 2029 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் அரசாங்க கடன் காலவதியாகும் கட்டமைப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு 480 மில்லியன் ரூபாவை விஞ்சாத நிதியினை 2018 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க செயற்திறனுடைய பொறுப்பு முகாமைத்துவ சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கம் கருதி பயன்படுத்துவதற்கு உள்நாட்டில் அல்லது வௌிநாட்டில் சேகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 2018 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க செயற்திறனுடைய பொறுப்பு முகாமைத்துவ சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் 480 பில்லியன் ரூபாவை விஞ்சாத தொகையொன்றினை சேகரிப்பதற்கு பாராளுமன்றத்திற்கு பிரேரிப்பொன்றை சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.