• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2014 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க காணி (பாராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) சட்டத்தினை திருத்துதல்
- 50 சதவீதம் அல்லது அதற்கு கூடுதலான வௌிநாட்டு பங்கு உரிமையுடன் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட கம்பனிகளுக்கு நாட்டில் காணிகளை கொள்வனவு செய்வதற்கு 2014 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க காணி (பாராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) சட்டத்தின் மூலம் தடை செய்யப்பட்டதோடு, இந்த தடையானது 2018ஆம் ஆண்டில் குறித்த சட்டத்தை திருத்தியதன் மூலம் நீக்கப்பட்டது. ஆயினும், இந்த திருத்தத்தின் மூலம் 2018‑04‑01 ஆம் திகதியன்றுக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் காணி கொடுக்கல் வாங்கல்கள் சார்பில் நிதி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் குறித்த திகதியன்றுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட கொள்வனவுக்கு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இந்த முரண்பாட்டினை நீக்கும் நோக்கில் 2014 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள தடையினை மேற்போந்த காணி கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக நீக்கும் பொருட்டு சட்டமொன்றை வரைவதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.