• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
போலியான செய்திகளை பரப்புவது சம்பந்தமாக சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு தண்டனை சட்டக்கோவையையும் குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவையையும் திருத்துதல்
- இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்திற்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் குந்தகமான விதத்தில் போலியான செய்திகளை பரப்பும் ஆளொருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு தண்டனை சட்டக்கோவையையும் குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவையையும் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பாதுகாப்பு பற்றிய துறைக் குழுவானது நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிணங்க, இந்த குற்றங்கள் சம்பந்தமாக குற்றவாளியாக காணப்படும் ஒருவருக்கு 10 இலட்சம் ரூபா வரையிலான தண்டத் தொகையொன்றை விதிப்பதற்கு அல்லது 05 வருடங்களுக்கு கூடாத சிறைத்தண்டனையை விதிப்பதற்கு அல்லது இந்த இரண்டு வகை தண்டனைகளுக்கும் உட்படுகின்றவாறு தண்டனை சட்டக்கோவையையும் குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவையையும் திருத்தும் பொருட்டு பதில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக பொது நிருவாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.