2019-06-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இலங்கைக்கும் டென்மார்க்கிற்கும் இடையில் அரசாங்க மட்டத்திலான உடன்படிக்கையொன்றை செய்துகொள்ளல் - இரு நாடுகளுக்குமிடையில் பொருளாதார உறவுகளை விருத்தி செய்துகொள்ளும் நோக்கில் பொருளாதார நடவடிக்கைகளின் போது இரட்டைவரி விதிப்பைத் தடுப்பதற்கும் அரசிறை நழுவலைத் தடைசெய்வதற்குமாக இலங்கைக்கும் டென்மார்க்கிற்கும் இடையில் உத்தியோகத்தர் மட்டத்தில் உடன்படிக்கையொன்று செய்துகொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு செய்துகொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைக்கு அரசாங்க மட்டத்தில் கைச்சாத்திடுவதற்கும் அதனை பாராளுமன்றத்தில் அங்கீகாரத்தின் பொருட்டு சமர்ப்பிப்பதற்குமாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |