2019-06-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை மத்திய வங்கி சார்பில் வௌிநாட்டு ஒதுக்கு முகாமைத்துவத்திற்காக தகவல் தொழிநுட்ப முறைமையொன்றைக் கொள்வனவு செய்தல் - இலங்கை மத்திய வங்கி சார்பில் வௌிநாட்டு ஒதுக்கு முகாமைத்துவத்திற்காக தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் திறைசேரி முகாமைத்துவ முறைமையின் உரிமப்பத்திர காலமானது 2021 ஆம் ஆண்டில் முடிவுறவுள்ளது. இதற்கமைவாக தற்பொதுள்ள தகவல் தொழிநுட்ப முறைமைக்குப் பதிலாக புதிய வௌிநாட்டு ஒதுக்கு முகாமைத்துவ முறைமையொன்றைக் கொள்வனவு செய்வதற்காக பெறுகை செயல்முறையினை ஆரம்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |