2019-06-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்க வைத்தியசாலைகளில் தற்போதுள்ள Analogue ஊடுகதிர் பிடிப்பு இயந்திரங்களை டிஜிட்டல் ஊடுகதிர் பிடிப்பு - நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே இனங்கண்டு மிகச் சிறந்த விதத்தில் நோய்களை நிர்ணயிப்பதற்கு டிஜிட்டல் ஊடுகதிர் பிடிப்பு முறையினை பயன்படுத்துவது ஆக்கத்திறன் உயர்ந்த தொழினுட்ப முறையாக இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகள் சிலவற்றில் தற்போதுள்ள Analogue ஊடுகதிர் பிடிப்பு இயந்திரங்களை டிஜிட்டல் ஊடுகதிர் பிடிப்பு முறைமைகளாக மேம்படுத்துவ தற்கான கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை யினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பெல்ஜியம் M/s. Agfa N.V நிறுவனத்திடமிருந்து விரிவான கருத்திட்டப் பிரேரிப்பொன்றை பெற்றுக் கொண்டு மதிப்பிடுவதற்கும் இதன் பொருட்டு தேவையான நிதி வசதிகளை ஏற்பாடு செய்துகொள்ளும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |