• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலநிலை பாதிப்புகளை தணிக்கும் பல்கட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் கட்டம் - I ஐ நடைமுறைப்படுத்துதல்
- காலநிலை பாதிப்புகள் காரணமாக நிகழும் ஆபத்துக்களை குறைக்கும் பொருட்டு மகாவலி, களனி, மல்வத்து, கிங், நில்வளா, அத்தனகலு, முந்தெனிஆறு ஆற்றுப்படுகைகளையும் அதேபோன்று கலாஓயா, தெதுருஓயா, மாஓயா மற்றும் கல்ஓயா ஆற்றுப்படுகைகளையும் தழுவும் விதத்தில் காலநிலை பாதிப்புகளை தணிக்கும் பல்கட்ட கருத்திட்ட மொன்று 8-10 வருட காலப்பகுதிக்குள் 03 கட்டங்களில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் முதற்கட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள வௌ்ளப்பெருக்கு சம்பந்தமாக முன் எச்சரிக்கை மற்றும் களனி கங்கையில் வௌ்ளப்பெருக்கு ஆபத்தினை குறைக்கும் கருத்திட்டத்தை 310 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட முதலீட்டில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் காலநிலை மற்றும் வானிலை தொடர்பிலான எதிர்வு கூறல்களைச் செய்வதற்கும் அனர்த்தங்களை முன்னதாகவே அறிவிப்பதற்கும் உள்ள ஆற்றலை விருத்தி செய்வதற்கும் ஹங்வெல்லைக்கும் கடுவெலைக்கும் இடையில் கீழ் களனி கங்கை கரையில் வௌ்ளப்பெருக்கு ஆபத்தினை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்குத் தேவையான நிதி வசதிகளை ஏற்பாடு செய்வதற்கு உடன்பாடு தெரிவித்துள்ள அபிவிருத்தி மற்றும் புனரமைப்பிற்கான சருவதேச வங்கியுடன் கடன் இணக்கப்பேச்சுக்களை நடாத்துவதற்கும் நிதி உடன்படிக்கையினைச் செய்து கொள்வதற்குமாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.