2019-06-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தங்கொட்டுவ பிரதேசத்தில் சுற்றாடல் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மாஓயா சூழல் இயைபாக்கமுள்ள ஒதுக்கு நிலமொன்றை பிரகடனப்படுத்துதல் - வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள் அதேபோன்று முறையற்ற களிமண் அகழ்வு காரணமாக தங்கொட்டுவ பிரதேசத்தில் மாஓயா சார்ந்து பல்வேறுபட்ட சுற்றாடல் பிரச்சினைகள் உருவாகியுள்ளன. இந்தப் பிரச்சினைக்கு தீர்வொன்றாக மாஓயா நீரேந்தற் பரப்பின் இரு பக்கத்திலும் போதுமான அகலத்தில் சூழல் இயைபாக்கமுள்ள ஒதுக்கு நிலமொன்றை பிரகடனப்படுத்துவதற்கு பிரேரிக்கப் பட்டுள்ளது. இதற்கிணங்க, உத்தேச ஒதுக்கத்தின் வடமேல் மாகாணத்திற்குரிய பகுதியை 1990 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வடமேல் மாகாண சுற்றாடல் நியதிச்சட்டத்தின் கீழும் மேல் மாகாணத்திற்குரிய பகுதியை 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழும் மாஓயா போஷிப்பு வலயத்தை சூழல் இயைபாக்கமுள்ள ஒதுக்கு நிலமாக பிரகடனப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |