2019-05-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய பாதுகாப்புக்கு ஒத்தாசை நல்குவதற்காக 'கம ரக்கும' அமைப்புகளை கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் ஆரம்பித்தல் - உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையையும் பொருளாதார நிலையையும் மீள பழைய நிலைக்கு கொண்டுவந்து அவர்களின் உள்ளத்தில் பாதுகாப்பு நம்பிக்கையை உறுதி செய்வதற்கு பாதுகாப்பு பிரிவினரினதும் அதேபோன்று அனைத்து பிரசைகளினதும் பங்களிப்பு அத்தியாவசியமானதாகும். இதற்கமைவாக பொதுமக்களின் பல்வேறுபட்ட பாதுகாப்புத் தேவைகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகளுக்கு ஒத்தாசை நல்கக்கூடிய 'கம ரக்கும' என்னும் பெயரில் அழைக்கப்படும் மக்கள் தொண்டர் அமைப்பினை நாட்டின் கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் அனைத்தையும் தழுவும் விதத்தில் தாபிப்பதற்கும் இதற்குத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்வதற்குமாக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |