2019-05-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நடுத்தர வருமான வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்கான துரித நிகழ்ச்சித்திட்டம் - அரசாங்க மற்றும் தனியார் ஆகிய இரண்டு துறைகளிலும் நடுத்தர வருமானத்திற்குரிய சம்பளம் பெறுபவர்களுக்கு வீட்டு வசதிகளை வழங்கும் நோக்கில் நடுத்தர வருமான வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்கான துரித நிகழ்ச்சித்திட்டம் அரசாங்கத்தின் முன்னுரிமை நிகழ்ச்சித்திட்டமொன்றாக செயற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அரசாங்க மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு வீட்டு அலகொன்றை கொள்வனவு செய்வதற்கு 5 மில்லியன் ரூபாவைக் கொண்ட உச்ச கடன் தொகையொன்றை 7 சதவீத வட்டியின் கீழ் பெற்றுக் கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டிருந்தது, ஆயினும் தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப மேற்போந்த கடன் திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு எதிர்பார்க்கும் பயனாளிகளின் கோரிக்கைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இந்த சலுகை கடன்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் தொகையை 10 மில்லியன் ரூபா வரை அதிகரிப்பதற்கும் அதற்கான வட்டி வீதத்தை 6 சதவீதமாக குறைப்பதற்கும் அதன் மூலம் பெறும்பாலானோருக்கு நலன்கள் கிடைக்கக்கூடிய விதத்தில் தெரிவு செய்யும் தகவுதிறனை திருத்துவதற்கும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |