2019-05-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
'என்டர்பிறைஸ் ஶ்ரீலங்கா' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி வசதிகளை விரிவுபடுத்துதல் - அரசாங்கத்தின் முன்னுரிமை நிகழ்ச்சித்திட்டமொன்றான 'என்டர்பிறைஸ் ஶ்ரீலங்கா' நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள், இளைஞர்கள், பெண் தொழில்முயற்சியாளர்கள், சுயதொழிலாளர்கள், பட்டதாரிகள், புலம்பெயர் தொழிலாளர்கள் சார்பில் 17 சலுகை வட்டி கடன் திட்டங்களும் 03 மீள் நிதியிடல் கடன் திட்டங்களும் 02 நிதிசாரா வசதிளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டங்களும் செயற்படுத்தப்பட்டுள்ளதோடு, ஏற்கனவே இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் சுமார் 81 பில்லியன் ரூபா கடனாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேசிய அபிவிருத்தி செயற்பாட்டிற்கு பங்களிப்பு நல்கும் பல்வேறுபட்ட தரப்பினர்களின் கோரிக்கைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு 2019 வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் தற்போது செயற்படுத்தப்பட்டுவரும் கடன் திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் நலன்களை மேலும் விரிவுபடுத்துவதற்கும் இந்த கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது முகங்கொடுக்க நேரிடும் தொழிநுட்ப ரீதியிலான பிரச்சினைகளை குறைக்கும் நோக்கிலும் 'ரண் அஸ்வென்ன', 'ரிய சக்தி', 'ஹோம் சுவீட்ஹோம்', சிஹின மாளிகா', 'சிட்டி ரைட்', 'ஜய இசுர', 'மினி டெக்ஸி / எலெக்ட்றிக் திறீ வீலர்', எனது எதிர்காலம் என்னும் கடன் திட்டங்கள் பொது மக்களுக்கு மேலும் நன்மை மற்றும் சலுகை கிடைக்கும் விதத்தில் திருத்தப்பட்டுள்ளன இவ்வாறு திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|