2019-05-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சர்வதேச அரசிறை முறிகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் - 2019 - 2019 ஆம் ஆண்டு சார்பில் அங்கீகரிக்கப்பட்ட அரச கடன் எடுத்தல் எல்லைக்குள் செயலாற்றி சர்வதேச சந்தை நிலைமையையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு 1,500 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியினை, சர்வதேச அரசிறை முறிகளை வழங்குவதன் மூலம் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |