2019-05-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வலப்பனை புதிய நீதிமன்ற கட்டடத்தை நிர்மாணித்தல் - வலப்பனை மாவட்ட / நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக வலப்பனை, தெறிபஹ, இராகலை, உடுபுசல்லாவை, மத்துரட்ட, மந்தாரம்நுவர, அங்குரன்கெத்த ஆகிய பொலிஸ் அதிகார பிரதேசங்களுக்குரிய நீதிமன்ற சேவைகளை வழங்குகின்றது. ஆயினும் இதன் பொருட்டு பயன்படுத்தப்படும் கட்டடத்தில் நிலவும் மட்டுப்படுத்தப்பட்ட இடவசதி காரணமாக கடும் இடையூறுகளுக்கு முகங்கொடுக்கவேண்டி நேர்ந்துள்ளது. ஆதலால், வலப்பனை மாவட்ட / நீதவான் நீதிமன்றத்திற்கு புதிய கட்டடத்தொகுதியொன்றை இதே நீதிமன்ற மனையிடத்திலேயே 212.3 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டின் கீழ் நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பொருட்டான மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு கையளிக்கும் பொருட்டு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |