• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திருகோணமலை நீதிமன்ற கட்டடத்தொகுதியை நிர்மாணித்தல் (
- திருகோணமலை நீதிமன்ற கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள திருகோணமலை உயர்நீதிமன்றம், சிவில் மேன்முறையீட்டு உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம், மேலதிக நீதவான் நீதிமன்றம் மற்றும தொழில் நியாயசபை என்பவற்றுக்காக பயன்படுத்தப்படும் கட்டடங்களில் நிலவும் மட்டுப்படுத்தப்பட்ட இடவசதி காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக வருகைதரும் பொது மக்களும் அதேபோன்று அவற்றின் பதவியினரும் கடும் இடையூறுகளுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கமைவாக நீதிமன்ற சேவைக்கு போதுமான இடவசதி செய்துகொடுக்கும் எதிர்பார்ப்புடன் சுமார் 250 மில்லியன் ரூபா முதலீட்டில் புதிய கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதோடு, இதன் பொருட்டான மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு கையளிக்கும் பொருட்டு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.