2019-05-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பொலன்நறுவை புனித நகருக்கு உள்நுழைவதற்கு ஆரம்பிக்கும் இடத்தில் நுழைவுக் கோபுரத்தை நிர்மாணித்தல் - 'பிபிதெமு பொலன்நறுவை' மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒருங்கிணை வாக மரபுரிமை நகரமொன்றாக பொலன்நறுவை புனித நகருக்கு அண்மித்த வலயத்தை அபிவிருத்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக பொலன்நறுவை நகரத்தை பார்வையிடுவதற்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கு இயலுமாகும் வகையில் பொலன்நறுவை புனித நகரத்திற்கு உள்நுழையும் ஹத்தமூன முற்சந்திக்கு அருகாமையில் பொலன்நறுவை இராசதானியின் அடையாளத்தை எடுத்துக் காட்டும் விதத்தில் நுழைவுக் கோபுரமொன்றை நிர்மாணிக்கும் பொருட்டு வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |