2019-05-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கூட்டுறவுத் துறையில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு நிபுணர்கள் குழுவொன்றை நியமித்தல் - நாட்டிலும் அதேபோன்று சர்வதேச ரீதியிலும் விரிவானதும் வினைத்திறன்மிக்கதுமான சேவையொன்றை வழங்கி பொது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக கூட்டுறவு தொழில்முயற்சியானது விசேட பங்களிப்பை நல்குகின்றது. ஆயினும் நாட்டில் கூட்டுறவுத் துறையில் அரசியல், வினைத்திறனற்ற முகாமைத்துவம் மற்றும் நிருவாக பிரச்சினைகள் போன்றவை அவதானிக்கப்பட்டுள்ளன. ஆதலால், மொத்த கூட்டுறவு செயற்பாடுகள், இதில் தற்போது காணப்படும் பிரச்சினைகள், இந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் இதன் பொருட்டு கூட்டுறவுத் துறை சட்ட கட்டமைப்புக்குள் செய்யப்படவேண்டிய திருத்தங்கள் சம்பந்தமான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளவர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |