• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலினால் சுற்றுலாத் துறைக்கு ஏற்பட்ட பிரதிகூலமான பாதிப்பினை குறைப்பதற்கான மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
- சுற்றுலாத் துறையின் ஊடாக பிறப்பிக்கப்படும் வருமானத்தையும் இந்த துறையில் தொழில்வாய்ப்புகளையும் அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் 'இலங்கை சுற்றுலாத் துறை திறமுறைத் திட்டம் 2017-2020' நடைமுறையில் உள்ளதோடு, அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக மேற்போந்த நோக்கத்தினை நிறைவேற்றிக் கொள்வது சவாலாக உள்ளது. ஆதலால், அதற்கு மாற்று வழியாக கூட்டு மக்கள் தொடர்பாடல், குறுகியகால விற்பனை மற்றும் பண்புத்தர தொடர்பாடல் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் முக்கியத்துவம் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, துறையில் அனுபவம் மிக்க உலகளாவிய முகவர் நிறுவனங்கள் ஊடாக 45 நாட்களைக் கொண்ட குறுகியகால மக்கள் தொடர்பாடல் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப் படுத்துதல் மற்றும் இலங்கையில் சுற்றுலாத்துறைக்கான பண்புப் பெயரை மீண்டும் பிரபல்யப்படுத்துவதற்குமாக ஆறு (06) மாத காலப்பகுதி முழுவதும் விளம்பரங்களை செய்வதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப் படுத்தும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.