• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- சுற்றுலா பயணிகளுடையே கவரப்பட்ட இடமொன்றாக இலங்கை பிரபல்யமடைந்திருந்ததோடு, இந்த நிலைமையை தொடர்ந்தும் விருத்தி செய்துகொள்ளும் நோக்கில் இந்த நாட்டுக்கு வௌிநாட்டு சுற்றுலா பயணிகளை கொண்டுவந்த சுற்றுலா ஏற்பாட்டாளர்களுடன் இணைந்து கூட்டு சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகமானது திட்டமிட்டுள்ளது. இதற்கிணங்க வருடமொன்றில் 250 பயணிகளுக்கு மேலாக இலங்கைக்கு கொண்டுவரும் வௌிநாட்டு சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்களுடன் இணைந்து சுமார் 150மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டில் உத்தேச நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் ஐக்கிய இராச்சியம், இந்தியா, ரஷ்யா, இத்தாலி, இஸ்ரேல், ஜேர்மனி, சீனா, யுக்ரேன், யப்பான், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, பென்லக்ஸ், கொரியா, வளைகுடா மற்றும் ஸ்கண்டினேவியா இராச்சியங்களில் சுற்றுலா ஏற்பாட்டாளர்களிடமிருந்து மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்களுக்கு பிரேரிப்புகளைப் பெற்றுக் கொள்வதற்குமாக சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.