2019-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அண்மையில் நாட்டின் சில பிரதேசங்களில் ஏற்பட்ட மோதல் நிலைமையின் விளைவாக நிகழ்ந்த சேதங்களுக்கு நட்டஈடு வழங்குதல் - உயிர்த்த ஞாயிறுதினத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளினால் ஏற்பட்ட சேதங்களுக்கு கொடுப்பனவுகளை செய்வதற்கான அதே வழிமுறையை பின்பற்றி, அண்மையில் நாட்டின் சில பிரதேசங்களில் ஏற்பட்ட மோதல் நிலைமையின் விளைவாக சேதமடைந்த பள்ளிவாசல்களை புனரமைத்தல் குறித்து நட்டஈட்டை வழங்கும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |